தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரும்பிய பக்கம் எல்லாம் திருடா திருடி எனும் வெற்றி படத்தை கொண்டாடியவர் டைரக்டர் சுப்ரமணியம் சிவா. தனுஷ்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவரை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்க வைத்தவர். இந்தபடத்திற்கு பிறகு தனுஷூம், சுப்ரமணிய சிவாவும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர்கள் ஆனார்கள். திருடா திருடி படத்திற்கு பிறகு ஜீவாவை வைத்து பொறி எனும் படத்தை எடுத்தார். படம் சுமார் என்றாலும் படத்தில் ஒரு நல்ல கருத்தை தெரிவித்து இருந்தார். இந்தபடத்திற்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து சீடன் எனும் படத்தை இயக்கினார். ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது உலோகம் என்ற படத்தை இயக்கி வருகிறார். நான் கடவுள், அங்காடித்தெரு படங்களின் வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனின் உலோகம் நாவலை மையப்படுத்தி இந்த கதையை இயக்கி வருகிறார் சிவா.
இந்தபடத்தில் அவர் எடுத்துள்ள கதைக்களம் இலங்கை தமிழ் மக்களின் வாழ்வியலை பற்றியது. இதுவரை இயக்குநராக மட்டுமே இருந்து வந்த சிவா இப்படத்தில் இயக்குநர் பொறுப்புடன் ஹீரோ பொறுப்பையும் ஏற்றுள்ளார். உலோகத்திற்காக தன்னை வருத்தி கெட்-அப் எல்லாம் மாற்றம் செய்து, உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் 70 சதவீத படத்தை முடித்துவிட்டார் சிவா. உலோகம் படத்தில் சிவா தவிர இந்தப்படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் தான். இதுவரை தான் இயக்கிய படங்களை காட்டிலும் உலோகம் படம் ரசிகர்களிடத்தில் ஒரு புதிய அடையாளத்தை தனக்கு ஏற்படுத்தி கொடுக்கும் என நம்புகிறார் சிவா. மேலும் தற்போது கடல், நீர்ப்பறவை போன்ற படங்களுக்கு வசனம் எழுதி வரும் எழுத்தாளர் ஜெயமோகனும் தனது உலோகம் கதை எப்படி திரையில் வர போகிறது என்ற மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்.