பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
ராட்டினம், மன்னாரு படங்களில் நடித்த ஸ்வாதி, தற்போது லவ்டுடே பாலசேகரன் இயக்கும் ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவருக்கு ஜோடி ராட்டினம் படநாயகனான லகுபரன்தான். ஏறகனவே பழக்கப்பட்ட நடிகர் என்பதால் ராட்டினம் படத்தில் நடித்ததை விட இப்படத்தில் இன்னும் நெருக்கமாக நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில், ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தின் ஸ்பாட்டுக்கு சொன்னபடி வராமல் பல நாட்களாக அவர் டேக்கா கொடுத்து வருவதாகவும், அதனால் பல நாட்களில் படப்பிடிப்பு பேக்அப் ஆனதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுபற்றி ஸ்வாதியைக்கேட்டால், நான் ஸ்பாட்டுக்கு சொன்னபடி போகாதது உண்மைதான். ஆனால் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். மருத்துவமனையில் பரிசோதித்தபோது மஞ்சகாமாலை நோய் இருப்பது தெரிந்தது. அதனால் இயக்குனர் பாலசேகரனிடம் இதுபற்றி தெரிவித்து விட்டு, இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றேன். அதையடுத்து இப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன்.ஆனால் நான் வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு செல்லாமல் இழுத்தடித்து வருவதாக என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி விட்டது. இதை இப்படியே விட்டால் என்னைப்பற்றி கால்சீட் சொதப்பல் நடிகை என்ற முத்திரை விழுந்து விடும் என்பதால், இப்போது எனது அபிமானிகளிடம் நடந்தது குறித்து விளக்கமளித்து வருகிறேன் என்கிறார் ஸ்வாதி.