டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராட்டினம், மன்னாரு படங்களில் நடித்த ஸ்வாதி, தற்போது லவ்டுடே பாலசேகரன் இயக்கும் ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவருக்கு ஜோடி ராட்டினம் படநாயகனான லகுபரன்தான். ஏறகனவே பழக்கப்பட்ட நடிகர் என்பதால் ராட்டினம் படத்தில் நடித்ததை விட இப்படத்தில் இன்னும் நெருக்கமாக நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில், ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தின் ஸ்பாட்டுக்கு சொன்னபடி வராமல் பல நாட்களாக அவர் டேக்கா கொடுத்து வருவதாகவும், அதனால் பல நாட்களில் படப்பிடிப்பு பேக்அப் ஆனதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுபற்றி ஸ்வாதியைக்கேட்டால், நான் ஸ்பாட்டுக்கு சொன்னபடி போகாதது உண்மைதான். ஆனால் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். மருத்துவமனையில் பரிசோதித்தபோது மஞ்சகாமாலை நோய் இருப்பது தெரிந்தது. அதனால் இயக்குனர் பாலசேகரனிடம் இதுபற்றி தெரிவித்து விட்டு, இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றேன். அதையடுத்து இப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன்.ஆனால் நான் வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு செல்லாமல் இழுத்தடித்து வருவதாக என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி விட்டது. இதை இப்படியே விட்டால் என்னைப்பற்றி கால்சீட் சொதப்பல் நடிகை என்ற முத்திரை விழுந்து விடும் என்பதால், இப்போது எனது அபிமானிகளிடம் நடந்தது குறித்து விளக்கமளித்து வருகிறேன் என்கிறார் ஸ்வாதி.