மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆக தயாராகி வரும் வடிவேலு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம், தெனாலிராமன் ஆகிய இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார். ஆனால் இந்த படங்களை பணம் போட்டு தயாரிக்கத்தான் யாரும் முன்வரவில்லை. இதனால் அடுத்து நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.
இந்த நிலையில், சமீபத்தில் வடிவேலு சொந்தமாக படம் தயாரித்து நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதைப்பற்றி வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்களிடம் விசாரித்தபோது, அவராவது சொந்த காசில் படம் எடுப்பதாவது என்கிறார். யாராவது பணம் போட்டால் வேண்டுமானால் நடிப்பார். ஒருநாளும் சொந்த காசில் படம் எடுக்க மாட்டார் அவர். அவருடன் எந்நேரமும் இருக்கும் நடிகர்கள் நாங்கள். அவர் எவ்வளவு பெரிய கஞ்சன் என்பது எங்களுக்குத்தானே தெரியும். அதனால் அந்த செய்தி கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்கிறார்.