‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு படம்,அதுவும் முதல்படம் வெளிவரும் முன்பே பிரபலங்களின் பாராட்டுகள், பூ கொத்துக்கள், ஆரோக்கியமான விமர்சனங்கள் என்று அதளபட்டு கொண்டு இருக்கிறார் சாட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அன்பழகன். இதோ அவரைப்பற்றியும், சாட்டை படம் பற்றியும் அவரே கூறுகிறார் கேளுங்கள்...
என் சொந்த ஊர் அரியலூர் அருகே உள்ள சிறிய கிராமம். எத்தனையோ சினிமா ஜாம்பவான்கள் என் மண்ணில் இருந்து வந்துள்ளனர். இப்போது நானும் உங்கள் முன் சினிமா ஆசையால் சென்னை வந்தேன். பிலிம் இன்ஸ்டியூட்டில் நானும் பொம்மரிலு பாஸ்கர், ஜெயம் ராஜா எல்லாரும் ஒரே செட் தான். சினிமாவில் என் முதல் குரு அகத்தியன் சார் தான். அதன்பிறகு நிறைய பயணம். பிறகு பிரபுசாலமனிடம் லீ, லாடம், கொக்கி போன்ற படங்களில் வேலை பார்த்தேன். அதன்பிறகு இந்த கதையை ரெடி பண்ணி சாலமன் சார்கிட்ட சொன்னேன். அவர் கதை கேட்டு படம் எடுக்க ஒப்புக்கொண்டார். நிச்சயம் இந்தபடத்தில் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனிக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கு. படத்தில் எல்லோரும் அவரவர் கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். இந்தப்படம் சாட்டை; ஆனால் சொல்லப் போவது ஒரு சமூக பொறுப்பான படம்.
சாட்டை படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து நடிக்க வைத்துள்ளேன். இதுவரை பார்த்த தம்பி ராமையா இந்த படத்தில் புது மாதிரியா வருவார். அவர்பேசும் பாஷை, சபாரி சூட், தலை விக், நடை, 40 வாத்தியார்களை வைத்துக்கொண்டு அவர் கொடுக்கும் அலப்பறை படம் பார்க்கும் போது உங்களுக்கே புரியும். உதவி தலைமை ஆசிரியர் சிங்கம் பெருமாள். ஒரு நெகட்டிவ் அப்ரோச். ஆனால் அவர் கையாளும் விதம் அவ்வளவு அருமையா இருக்கும். எந்த ஒரு நிறுவனத்திலும், அலுவலகத்திலும் இரண்டு பிரிவு இருப்பது உண்டு. அதை எப்படி சிங்கம் பெருமாள் கையாளுகிறார் என்பது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். முதல் முறையாக வில்லத்தனமாக ஒரு காமெடி கச்சேரி செய்திருக்கிறார். படம் பார்த்த பலரும் அவருக்கு விருது உண்டு என்றே பாராட்டுகின்றனர். மேலும் சமுத்திரகனி பற்றி சொல்லணும். தயாளன் என்ற ஆசிரியராக நடிக்கவில்லை, ஆசிரியராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
வாத்தியார்களின் பொறுப்பு, படிப்பவர்களின் பொறுப்பு, வளர்ப்பு முறை, பிள்ளைகளின் வளர்ச்சி இப்படியாக சொல்ல போகிறது படம். பிள்ளைகளுக்கு மீடியா மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் ஆசிரியர்கள் படித்த விஷயங்கள் தவிர இன்னும் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும், அரசு பணியாட்களின் பொறுப்பு, பெற்றோர் பொறுப்பு, மாணவர்களின் கடமை இதை உணர்ந்தே இந்த சாட்டை படம் எடுத்திருக்கிறேன். இந்தபடம் பார்த்து எங்கேனும் ஒரு பள்ளியில் அல்லது ஒரு பெற்றோர், ஒரு மாணவன், ஒரு ஆசிரியர் மாறினால் கூட எனக்கு கிடைத்த வெற்றி தான் என்கிறார்.