தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"பத்தாயிரம் கோடி என்ற படத்தை இயக்குகிறார், சீனிவாசன் சுந்தர். இப்படத்தில், துருவ் நாயகனாகவும், மடால்ஷா நாயகியாகவும் நடிக்கின்றனர். அரசியல் தரகர் நிரா ராடியாவை, முக்கிய கதாபாத்திரமாக வைத்து, இந்த படம், தயாரிக்கப்படுவதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இது, "நிஜம் தானா என, இயக்குனரிடம் கேட்டபோது, "நிஜம் தான் என, ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் அவர். படம் குறித்து அவர் கூறுகையில், "பொறியியல் கல்லூரியில் படிக்கும், நான்கு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுகிறது. அதற்காக, ஒரு அரசியல் தரகர் அநியாயமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர். திருடப் போன இடத்தில், மிகப் பெரிய புதையலே கிடைக்கிறது. அந்த மாணவர்களை பிடிக்க, போலீஸ் படை படையெடுக்கிறது. மாணவர்களிடம் இருந்து, அந்த புதையல் மீட்கப்பட்டதா என்பதை காமெடி கலாட்டாவாக சொல்கிறோம். கதையோடு ஒன்றி விட்ட கதாநாயகி மடால்ஷா, படத்தின் "கன்டினியூட்டி தொடர்பாக, எனக்கே, சில யோசனைகளை கூறிய போது, அவரின் புத்திசாலித்தனத்தை பார்த்து புல்லரித்துப் போனேன் என்றார் இயக்குனர்.