டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆர்.பாலமுருகன், 7வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், மெரினா என்ற தமிழ் சினிமா படத்தை பாண்டிராஜ் இயக்கி, தயாரித்தார். இந்த படத்தின் தயாரிப்புக்காக ரூ.50 லட்சம் செலவு செய்தேன். என்னை இணை தயாரிப்பாளராக பாண்டிராஜ் சேர்த்துக்கொண்டார். ஆனால் படம் வெளியானபோது, அதில் என் பெயரை சேர்க்கவில்லை.
இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மெரினா படத்தை தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்து, செப்டம்பர் 14ம்தேதி வெளியாக உள்ளதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் படம் வெளியானால், எனக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே தெலுங்கு மொழியில் மெரினா படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், மெரினா படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை 17ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.