Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

15 செப், 2012 - 12:14 IST
எழுத்தின் அளவு:

படத் தயாரிப்பாளர், நடிகர் என, இரு முகம் காட்டி வந்த, "பவர் ஸ்டார் சீனிவாசன், பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் சிக்கினார். அவர் மீது, மோசடி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி; தோல் தொழில் செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்த சீனிவாசன், 50. இவர், "லத்திகா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்தார். தோல் தொழிலை விரிவுப்படுத்த பாலசுப்ரமணிக்கு, 10 கோடி ரூபாய் தேவைப்பட்டது. நண்பர் ஒருவர் மூலம் சீனிவாசனை சந்தித்தார். 10 கோடி ரூபாயை, தனியாரிடம் வாங்கித் தருவதாக சீனிவாசன் கூறினார். கடன் வாங்கிக் கொடுக்க, 50 லட்சம் ரூபாய் முன்பணமாக வேண்டுமென சீனிவாசன் கேட்டார். அத்தொகையை, ஒரு தவணையாகத் தராமல், நான்கு தவணைகளில் பாலசுப்ரமணி கொடுத்தார். மேலும், 15 லட்சம் ரூபாயை கணக்கில் வராமல் தர வேண்டுமென, சீனிவாசன் கேட்டார்.

10 கோடி ரூபாய் கிடைக்கும் ஆசையில், ஒட்டுமொத்தமாக 65 லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்தார். அதில், 50 லட்சத்திற்கு மட்டும் சீனிவாசன் ரசீது கொடுத்துள்ளார். கடைசி தவணையாக வாங்கிய 15 லட்சத்திற்கு ரசீது கொடுக்கவில்லை. 10 கோடி ரூபாய்க்கான வரைவு காசோலையை பாலசுப்ரமணியிடம் காட்டிய சீனிவாசன், "அத்தொகையை வங்கியில் மாற்றித் தருகிறேன் என, நம்பிக்கை தெரிவித்தார். கடன் தொகையை பெற்றுத் தராமல் சீனிவாசன் ஏமாற்றினார். பாலசுப்ரமணி, பல முறை அவரது அலுவலகத்திற்கு அலைந்தும், சீனிவாசனை சந்திக்க முடியாமல் திரும்பினார். அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் சிரமப்படும் நிலைக்கு பாலசுப்ரமணி தள்ளப்பட்டார்.

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சீனிவாசனை சந்தித்த பாலசுப்ரமணி, "எனக்கு நீங்கள் 10 கோடி ரூபாய் கடன் வாங்கித் தர வேண்டாம். நான் கொடுத்த 65 லட்சம் ரூபாயை திருப்பித் தாருங்கள் என, கேட்டார். அப்போது, பாலசுப்ரமணியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த சீனிவாசன், "போலீசுக்கு போனால் தொலைத்து விடுவேன் என, மிரட்டினார். இது குறித்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானி ஈஸ்வரியிடம், கடந்த ஜூலை மாதம் புகார் கொடுத்தார். போலீசார், வழக்கு பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அலைந்த பாலசுப்ரமணி, பல முறை துணை கமிஷனரை நேரில் சென்று பார்த்து, தான் பாதிக்கப்பட்டதை விவரித்தார். அதையடுத்து, கடந்த மாதம் 24ம் தேதி, கீழ்ப்பாக்கம் போலீசார், மோசடி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதை தெரிந்து கொண்ட சீனிவாசன், தலைமறைவானார்.

சீனிவாசன், நேற்று காலை, ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்கும் தகவல், போலீசாருக்கு கிடைத்தது. சீனிவாசனை, மோசடி வழக்கில் போலீசார் அங்கு கைது செய்தனர். "வாங்கிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன்; மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள் என, போலீசாரிடம் சீனிவாசன் கூறி வந்தார். புகார்தாரரான பாலசுப்ரமணி, "சீனிவாசன் ஒரு ஏமாற்று பேர் வழி. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்கள். அவரை வெளியே விட்டால், என்னை அடியாட்களை வைத்து தாக்குவார் என, கூறினார். சீனிவாசனை, நேற்று மாலை, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, நேற்றிரவு புழல் சிறையில் சீனிவாசன் அடைக்கப்பட்டார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

ராம் - Chennai,இந்தியா
18 செப், 2012 - 01:05 Report Abuse
 ராம் என்னது... பவர் ஸ்டார் ஓட fuse புடிங்கிட்டாங்களா... உடனே கூடங்குளத்துக்கு போன் போடு ... 4 இட்லி, கெட்டி சட்டினியோட 500 மெகா வாட் பார்சல்ல்ல்ல் .....
Rate this:
மலர் - Mannargudi ,மாசிடோனியா
17 செப், 2012 - 22:02 Report Abuse
 மலர் இன்னாது நீ அரசியலில் குதிப்பியா, ஏண்டா டுபுக்கு சங்கத்தில் ஆட்டைய போட்டது போதாது கணக்கு காமிக்காம, இதுல நாலு ஜால்ரா சுத்தி இருந்தா நீ உடனே அரசியலில் குதிபியா, நீ டுபாக்கூரு மட்டும் இல்லை லூசாயி மறை கழண்டு திரியுற டுபாகூரு. உயர உயர பறந்தாலும் காக்கா கழுகு ஆகமுடியாதுடி, ஒரு விசயத்தில் நீ நல்லா வளரலாம் அது உன் தலை வழுக்கை அப்புறம் தொந்தி. இதை யாராலும் தடுக்க முடியாது. ஏன் உன்னாலயே உன் வழுக்கை தொந்தி வளர்ச்சியை தடுக்க முடியாது மாமு.
Rate this:
குசுபதி - Kudiyatham,கஜகஸ்தான்
17 செப், 2012 - 20:33 Report Abuse
 குசுபதி ஏண்டா கவுண்ட குசுபதி கவுண்டமணி ஸ்டைல், உன்னிடம் அவன் வந்து ஐந்து இல்லை பத்து கேட்டானாடா இல்லை நீதான் அள்ளி கொடுத்து பிச்சாண்டியா போயிட்டியா, எச்சிகையில் காக்கா ஓட்டாத நீ கருத்து எழுதுறியா எருமை.
Rate this:
Asupathy - chennai,இந்தியா
16 செப், 2012 - 12:43 Report Abuse
 Asupathy அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்குற உனக்கு இது தேவையா (கவுண்டமணி ஸ்டைல் )
Rate this:
ராஜா - theni,இந்தியா
16 செப், 2012 - 11:15 Report Abuse
 ராஜா நான்கு தண்ணி உத்தி அணைப்போம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in