இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
படத் தயாரிப்பாளர், நடிகர் என, இரு முகம் காட்டி வந்த, "பவர் ஸ்டார் சீனிவாசன், பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் சிக்கினார். அவர் மீது, மோசடி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி; தோல் தொழில் செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்த சீனிவாசன், 50. இவர், "லத்திகா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்தார். தோல் தொழிலை விரிவுப்படுத்த பாலசுப்ரமணிக்கு, 10 கோடி ரூபாய் தேவைப்பட்டது. நண்பர் ஒருவர் மூலம் சீனிவாசனை சந்தித்தார். 10 கோடி ரூபாயை, தனியாரிடம் வாங்கித் தருவதாக சீனிவாசன் கூறினார். கடன் வாங்கிக் கொடுக்க, 50 லட்சம் ரூபாய் முன்பணமாக வேண்டுமென சீனிவாசன் கேட்டார். அத்தொகையை, ஒரு தவணையாகத் தராமல், நான்கு தவணைகளில் பாலசுப்ரமணி கொடுத்தார். மேலும், 15 லட்சம் ரூபாயை கணக்கில் வராமல் தர வேண்டுமென, சீனிவாசன் கேட்டார்.
10 கோடி ரூபாய் கிடைக்கும் ஆசையில், ஒட்டுமொத்தமாக 65 லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்தார். அதில், 50 லட்சத்திற்கு மட்டும் சீனிவாசன் ரசீது கொடுத்துள்ளார். கடைசி தவணையாக வாங்கிய 15 லட்சத்திற்கு ரசீது கொடுக்கவில்லை. 10 கோடி ரூபாய்க்கான வரைவு காசோலையை பாலசுப்ரமணியிடம் காட்டிய சீனிவாசன், "அத்தொகையை வங்கியில் மாற்றித் தருகிறேன் என, நம்பிக்கை தெரிவித்தார். கடன் தொகையை பெற்றுத் தராமல் சீனிவாசன் ஏமாற்றினார். பாலசுப்ரமணி, பல முறை அவரது அலுவலகத்திற்கு அலைந்தும், சீனிவாசனை சந்திக்க முடியாமல் திரும்பினார். அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் சிரமப்படும் நிலைக்கு பாலசுப்ரமணி தள்ளப்பட்டார்.
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சீனிவாசனை சந்தித்த பாலசுப்ரமணி, "எனக்கு நீங்கள் 10 கோடி ரூபாய் கடன் வாங்கித் தர வேண்டாம். நான் கொடுத்த 65 லட்சம் ரூபாயை திருப்பித் தாருங்கள் என, கேட்டார். அப்போது, பாலசுப்ரமணியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த சீனிவாசன், "போலீசுக்கு போனால் தொலைத்து விடுவேன் என, மிரட்டினார். இது குறித்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானி ஈஸ்வரியிடம், கடந்த ஜூலை மாதம் புகார் கொடுத்தார். போலீசார், வழக்கு பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அலைந்த பாலசுப்ரமணி, பல முறை துணை கமிஷனரை நேரில் சென்று பார்த்து, தான் பாதிக்கப்பட்டதை விவரித்தார். அதையடுத்து, கடந்த மாதம் 24ம் தேதி, கீழ்ப்பாக்கம் போலீசார், மோசடி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதை தெரிந்து கொண்ட சீனிவாசன், தலைமறைவானார்.
சீனிவாசன், நேற்று காலை, ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்கும் தகவல், போலீசாருக்கு கிடைத்தது. சீனிவாசனை, மோசடி வழக்கில் போலீசார் அங்கு கைது செய்தனர். "வாங்கிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன்; மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள் என, போலீசாரிடம் சீனிவாசன் கூறி வந்தார். புகார்தாரரான பாலசுப்ரமணி, "சீனிவாசன் ஒரு ஏமாற்று பேர் வழி. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்கள். அவரை வெளியே விட்டால், என்னை அடியாட்களை வைத்து தாக்குவார் என, கூறினார். சீனிவாசனை, நேற்று மாலை, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, நேற்றிரவு புழல் சிறையில் சீனிவாசன் அடைக்கப்பட்டார்.