ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
காஞ்சனா படத்துக்குப்பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் கோவை சரளாவின் மார்க்கெட் தடாலடியாக எகிறியது. இதனால் தெலுங்கிலிருந்து அதிகப்படியான படங்கள் வர, ஐதராபாத்திலேயே செட்டிலாகி விட்டார் அவர். இந்த நிலையில், தற்போது அவரது சமீபத்திய மார்க்கெட்டை கருத்தில் கொண்டு கூடாரம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
இந்த படத்தில் கோவை சரளா அம்மா வேடத்தில் நடிக்கிறார். என்றாலும் அவரை மையப்படுத்திதான் படத்தின் கதையோட்டம் செல்கிறதாம். கூடவே காமெடி கலந்திருந்தால் கமர்சியலுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் காஞ்சனாவில் வருவது போல் காமெடியான அம்மாவாகவும் சரளாவை காண்பிக்க உள்ளார்கள். இது முழுக்க முழுக்க தன்னை நம்பியே எடுக்கப்படும் படம் என்பதால் இப்படத்துக்கு கூடுதல் கால்சீட்டுகளை வாரி வழங்கியிருக்கிறார் கோவை சரளா.