'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவை சரளாவுடன் தான் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக நடிகை ஜனனி ஐயர் தெரிவித்து இருக்கிறார். பாலாவின் அவன் இவன் படம்மூலம் காமெடி போலீஸாக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் ஜனனி ஐயர். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இப்போது இவர் நடித்த பாகன் படம் வெளியாகி உள்ளது. இதில் பொள்ளாச்சியில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக நடித்து இருந்தார். ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிந்திருந்த இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்தின் அம்மாவாக நடித்த கோவை சரளாவுடன் நடித்ததை தன்னால் மறக்கவே முடியாது என்கிறார்.
பாகன் படத்தில் ஜனனிக்கு முதல்நாள் ஷூட்டிங்கே கோவை சரளாவுடன் தானாம். முதல்நாளில் கோவை சரளாவுடன் கொஞ்சம் பயந்தே நடித்தாராம் ஜனனி. இவ்ளோ பெரிய நடிகையுடன் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயம் அவருக்கு. இருந்தாலும் அவ்வப்போது காட்சிகள் பற்றி ஜனனிக்கு சொல்லி கொடுத்தாராம் சரளா. ஆரம்பத்தில் அவரிடத்தில் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் விலகிவிட்டதாம். மேலும் அவரிடம் பல விஷயங்களை கற்று கொண்டதாக சொல்லும் ஜனனி, தன்னுடைய 2வது படத்திலேயே கோவை சரளாவுடன் நடித்துவிட்டதாகவும், அவருடன் நடித்தது தான் செய்த பாக்கியம் என்று சொல்லி பெருமைப்படுகிறார் ஜனனி. அப்படியே தன்னுடைய ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.