Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

இசை நிகழ்ச்சி அதிகம் நடத்தாதது ஏன்...? இளையராஜா பதில்!!

Ilayaraja replies why he cant hosting music program"நிதியுதவி (ஸ்பான்ஷர்) கிடைத்தால் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தயார் என, இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். மதுரை விஷால் டி மாலில், மலபார் கோல்ட் மற்றும் டைமண்ட்ஸ் கிளையை இசையமைப்பாளர் இளையராஜா திறந்து வைத்தார். பின், நிருபர்களிடம் இளையராஜா கூறியதாவது: நகை, டைமண்ட் விற்பனையுடன், கல்வி உதவி தொகை மற்றும் சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை, மலபார் குழுமம் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. இதனால்தான் இக்குழுமத்துக்கு "அம்பாசிடராக இருக்க முடிவு செய்தேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சித்ரா, மனோ போன்ற பாடகர்கள், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதால் அவர்களால் இசை நிகழ்ச்சி நடத்துவது எளிது. நான் இசை நிகழ்ச்சி நடத்த அதிக பணம் தேவைப்படும். மன நிம்மதி கொடுக்கும் இசைக்கு ஏற்ப பணம் செலவழிக்க யாரும் தயங்குவார்கள். போட்ட பணத்தை எப்படி வட்டியுடன் எடுக்க முடியும் என்றுதான் முதலீட்டாளர்கள் நினைப்பார்கள். இசை நிகழ்ச்சி நடத்தும் நேரத்தில், நான் 100 படங்களுக்கு இசை அமைத்துவிடுவேன். மலபார் குழுமம் போன்று பெரிய நிறுவனங்கள் "ஸ்பான்ஷர் செய்தால், மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த நான் தயார். சங்கீதத்தில், கலப்பு என்பதே இருக்க கூடாது என்பது என் எண்ணம். இவ்வாறு கூறினார்.

Tags »
Ilayaraja, replies, why he cant, hosting, music program, இசை நிகழ்ச்சி, நடத்தாதது, ஏன், இளையராஜா, பதில்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (10)

லிங்கம் - chennai,இந்தியா
2012-09-12 11:02:24 Report Abuse
 லிங்கம் ராஜா சார் மற்ற கலைஞர்களை மதிக்கும் பண்பு தெரியாதவர் தான் என்ற எண்ணம் கொண்டவர் அதனால் தான் ஒரு குறிகிய வட்டத்தில் நீன்று விட்டார் .ஆனால் ரகுமான் உலக புகழ் பெற்றார்.... அதுதான் கடவுளின் கருணை....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மஹா - chennai...,இந்தியா
2012-09-12 09:23:40 Report Abuse
 மஹா இளையராஜா என்கிற பெயரில் ஒரு கயவன் எழுதி இருப்பது... நகைக்க வைக்கிறது.. எல்லோரும் திரும்பி பார்த்து தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்றால் யாரும் நடத்த முடியாது... பேப்பர்-ல் அச்சடிச்ச காலம் தாண்டி இப்போ நெட்டிலும் வந்தாச்சு... எங்கே... பேப்பர் போதும் நெட் வேண்டாம் என்று நிறுத்த சொல்லுங்கள் பாப்போம்... ??? இளையராஜா என்பவர் ஒரு தனி மனிதன்... அவரது இசையை நாம் விரும்புகிறோம்... அவர் என்ன ஷோ நடத்தினாலும் அதன் ஒருங்கிணைப்பாளர் வைப்பது தான் விலை.. அதை நாம் வேண்டும் என்றால் வாங்க வேண்டும் இல்லை என்றால் விட்டுவிட்டு வேலையை பார்க்க வேண்டும்.. அவ்வளவே... ஏன்... மற்ற இசை அமைப்பாளர்கள் என்ன இலவசமாகவா நடத்துகிறார்கள் ????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கரடி புருடா - alli nagaram,அருபா
2012-09-11 17:46:24 Report Abuse
 கரடி புருடா தம்பி சீனிவாசு சென்னை ஐந்து மாதத்தில் 50 படம் உன் கணக்கு படி பார்த்தல் 10 மாதத்தில் நூறு படம். சரி இப்போ நீ சொல்லு பதில், தமிழ் சினிமா ஒரு மாசத்துக்கு இல்லை ஒரு வருசத்துக்கு எத்தினி வெளி வருது ஆண்டுக்கு 100 வருமா அதுல அத்தனையும் உங்க இசை தான் ஒலிக்குமா, ஒரு கச்சேரி பண்ண எத்தினி மாசம் வேணும் சொல்லுங்கோ அண்ணே சொல்லுங்க, புருடா கரடி விடலாம் ஆனா ஒரே அடிய அடிச்சு விடபுடாது, அப்புறம் யாரும் உங்களை நம்ப மாட்டானுக................. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லோனும் இது பெரியோரின் வாக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சுதா - Malaysia,மலேஷியா
2012-09-11 10:31:21 Report Abuse
 சுதா ஐயா, உங்களது பாடலால் நங்கள் பெற்ற இன்பம் அளவளாவியது என்று சொன்னால் அது மிகை ஆகாது. நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sarhunam.T - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
2012-09-11 05:28:29 Report Abuse
sarhunam.T மதி்ப்புக்குறிய இசைராசா அவர்களே தாங்களின் நாட்டுபுற இசைக்கு ஏராளமான ரசிகர்களின் விருப்பம் தாங்கள் அதி்க அளவில் இசையை ஏழை மக்களிடம் நேரில் கொண்டு சென்று அவர்கள் படும் துன்பங்களை சிறிது ஆறுதல் படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இவண் சற்குணம் சிங்கப்பூர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in