'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
"நிதியுதவி (ஸ்பான்ஷர்) கிடைத்தால் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தயார் என, இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். மதுரை விஷால் டி மாலில், மலபார் கோல்ட் மற்றும் டைமண்ட்ஸ் கிளையை இசையமைப்பாளர் இளையராஜா திறந்து வைத்தார். பின், நிருபர்களிடம் இளையராஜா கூறியதாவது: நகை, டைமண்ட் விற்பனையுடன், கல்வி உதவி தொகை மற்றும் சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை, மலபார் குழுமம் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. இதனால்தான் இக்குழுமத்துக்கு "அம்பாசிடராக இருக்க முடிவு செய்தேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சித்ரா, மனோ போன்ற பாடகர்கள், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதால் அவர்களால் இசை நிகழ்ச்சி நடத்துவது எளிது. நான் இசை நிகழ்ச்சி நடத்த அதிக பணம் தேவைப்படும். மன நிம்மதி கொடுக்கும் இசைக்கு ஏற்ப பணம் செலவழிக்க யாரும் தயங்குவார்கள். போட்ட பணத்தை எப்படி வட்டியுடன் எடுக்க முடியும் என்றுதான் முதலீட்டாளர்கள் நினைப்பார்கள். இசை நிகழ்ச்சி நடத்தும் நேரத்தில், நான் 100 படங்களுக்கு இசை அமைத்துவிடுவேன். மலபார் குழுமம் போன்று பெரிய நிறுவனங்கள் "ஸ்பான்ஷர் செய்தால், மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த நான் தயார். சங்கீதத்தில், கலப்பு என்பதே இருக்க கூடாது என்பது என் எண்ணம். இவ்வாறு கூறினார்.