பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தலைப்புக்கு சண்டை போட்டுக் கொள்வது தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. விஷால் நடித்த சமரன் படத்தின் தலைப்பை ஏற்கெனவே சீமான் பதிவு செய்து வைத்திருந்ததால் சமர் ஆனது. துப்பாக்கியும், கள்ளத்துப்பாக்கியும் ஒருபுறம் நீதிமன்றம் வரை சென்று மோதிக் கொண்டிருக்கிறது. இவனும் பணக்காரன் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி இவனும் பாசக்காரன் ஆனது. தாண்டவம் படத்தின் தலைப்பு என்னுடையது என்று புதிதாக ஒருவர் கிளம்பியிருக்கிறார். இந்த வரிசையில் இப்போது சிம்பு, ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் வாலு படத்திற்கும் பிரச்னை வந்திருக்கிறது.
தெய்வசிகமாமணி என்ற புதுமுக இயக்குனரின் படத்துக்கு வாலு என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதை இளவரசன் என்பவர் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது "வாலு தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம். சிம்பு படம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் படத்தை தயாரித்து முடித்து விட்டோம். அகில் ஹீரோவாகவும், சரண்யா நாக் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். ஆனால் சிம்பு படம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம்" என்கிறார். ஆனால் சிம்பு படத்தை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் தரப்போ "கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் பதிவு செய்தோம். அடுத்த ஏப்ரல் வரை இந்த தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம். இதை தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு கடிதமாக கொடுத்துள்ளது" என்கிறது.
இப்போது வாலு யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து தீவிரமா ஓடிக் கொண்டிருக்கிறது. பல லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் சினிமாக்காரர்களுக்கு மட்டும் தலைப்பு பஞ்சம் வருவது ஏன் என்று தெரியவில்லை. அதிலும் மோதிக் கொள்கிற அளவுக்கு வாலு என்ற தலைப்பில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறதோ தெரியவில்லை.