'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
திரைப்பட இயக்குனர்களாக வர விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்துவதைப்போல இசை அமைப்பாளராக, பாடகராக விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு ஆல்பத்தை தயார் செய்து, அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்தலாம் என்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
மேலும் அவர் கூறியதாவது: இன்றைக்கு இசையில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர்கள் எல்லாம் ஆல்பத்திலிருந்து வந்தவர்கள்தான். சினிமா பாட்டு மக்களிடம் வரவேற்பை பெறுகிறது என்றால் அதில் பாடகர்களின் பங்கு குறைவுதான். அந்த பாட்டை கொண்டுபோய் மக்களிடம் சேர்ப்பது, படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் செய்யும் விளம்பரம். ஆனால் ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால் அந்த பெருமை முழுவதும் பாடகர்களுக்குத்தான்.
எனவே சினிமாவில் அறிமுகமாக விரும்புகிறவர்களுக்கு ஆல்பமே சிறந்த வழி. அதேபோல திரைப்பட இசையில் புகழோடு இருப்பவர்வளும், அவ்வப்போது இசை ஆல்பத்தை வெளியிட்டு தங்கள் தனித் திறமைய வெளிப்படுத்த வேண்டும். என்கிறார்