ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்பட இயக்குனர்களாக வர விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்துவதைப்போல இசை அமைப்பாளராக, பாடகராக விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு ஆல்பத்தை தயார் செய்து, அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்தலாம் என்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
மேலும் அவர் கூறியதாவது: இன்றைக்கு இசையில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர்கள் எல்லாம் ஆல்பத்திலிருந்து வந்தவர்கள்தான். சினிமா பாட்டு மக்களிடம் வரவேற்பை பெறுகிறது என்றால் அதில் பாடகர்களின் பங்கு குறைவுதான். அந்த பாட்டை கொண்டுபோய் மக்களிடம் சேர்ப்பது, படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் செய்யும் விளம்பரம். ஆனால் ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால் அந்த பெருமை முழுவதும் பாடகர்களுக்குத்தான்.
எனவே சினிமாவில் அறிமுகமாக விரும்புகிறவர்களுக்கு ஆல்பமே சிறந்த வழி. அதேபோல திரைப்பட இசையில் புகழோடு இருப்பவர்வளும், அவ்வப்போது இசை ஆல்பத்தை வெளியிட்டு தங்கள் தனித் திறமைய வெளிப்படுத்த வேண்டும். என்கிறார்