ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
திரைப்பட இயக்குனர்களாக வர விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்துவதைப்போல இசை அமைப்பாளராக, பாடகராக விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு ஆல்பத்தை தயார் செய்து, அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்தலாம் என்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
மேலும் அவர் கூறியதாவது: இன்றைக்கு இசையில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர்கள் எல்லாம் ஆல்பத்திலிருந்து வந்தவர்கள்தான். சினிமா பாட்டு மக்களிடம் வரவேற்பை பெறுகிறது என்றால் அதில் பாடகர்களின் பங்கு குறைவுதான். அந்த பாட்டை கொண்டுபோய் மக்களிடம் சேர்ப்பது, படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் செய்யும் விளம்பரம். ஆனால் ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால் அந்த பெருமை முழுவதும் பாடகர்களுக்குத்தான்.
எனவே சினிமாவில் அறிமுகமாக விரும்புகிறவர்களுக்கு ஆல்பமே சிறந்த வழி. அதேபோல திரைப்பட இசையில் புகழோடு இருப்பவர்வளும், அவ்வப்போது இசை ஆல்பத்தை வெளியிட்டு தங்கள் தனித் திறமைய வெளிப்படுத்த வேண்டும். என்கிறார்