இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரைப்பட இயக்குனர்களாக வர விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்துவதைப்போல இசை அமைப்பாளராக, பாடகராக விரும்பும் இளைஞர்கள் குறைந்த செலவில் ஒரு ஆல்பத்தை தயார் செய்து, அதை தங்கள் விசிட்டிங் கார்டாக பயன்படுத்தலாம் என்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
மேலும் அவர் கூறியதாவது: இன்றைக்கு இசையில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர்கள் எல்லாம் ஆல்பத்திலிருந்து வந்தவர்கள்தான். சினிமா பாட்டு மக்களிடம் வரவேற்பை பெறுகிறது என்றால் அதில் பாடகர்களின் பங்கு குறைவுதான். அந்த பாட்டை கொண்டுபோய் மக்களிடம் சேர்ப்பது, படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் செய்யும் விளம்பரம். ஆனால் ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால் அந்த பெருமை முழுவதும் பாடகர்களுக்குத்தான்.
எனவே சினிமாவில் அறிமுகமாக விரும்புகிறவர்களுக்கு ஆல்பமே சிறந்த வழி. அதேபோல திரைப்பட இசையில் புகழோடு இருப்பவர்வளும், அவ்வப்போது இசை ஆல்பத்தை வெளியிட்டு தங்கள் தனித் திறமைய வெளிப்படுத்த வேண்டும். என்கிறார்