'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் நம்பர் -1 இடத்தை பிடிப்பதற்காக, பிரியங்கா சோப்ராவும், கரீனா கபூரும், ஏற்கனவே குடுமி பிடி சண்டை நடத்திக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான். சமீபத்தில், ஒரு இந்தி "டிவி சேனல்,ரன்பீர் கபூரும், பிரியங்கா சோப்ராவும்,இணைந்து நடித்த ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, ரன்பீரை அழைத்திருந்தது. ரன்பீரும், கரீனாவும், பாலிவுட்டின் பிரபலமான, கபூர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.ஆனாலும், இருவரும் இணைந்து, இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றது இல்லை. இதனால், ரன்பீருடன், கரீனாவை மேடையேற்ற முடிவு செய்தது, அந்த சேனல்நிர்வாகம். கரீனாவும், ஓ.கே., சொல்ல, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்த நிகழ்ச்சியில், பிரியங்காவும் பங்கேற்க போகிறார் என, தெரிந்ததும் கரீனாவின் அழகிய முகம், கொடூரமாக மாறி விட்டது. "பிரியங்கா பங்கேற்கும், எந்த நிகழ்ச்சியிலும்,நான் பங்கேற்க மாட்டேன்என, பல்டி அடித்துவிட்டார். பிரியங்காவுக்கு, இந்த விவகாரம்தெரியவந்ததும், சேனல் தரப்பை கூப்பிட்டுவைத்து, அவரும், தன் பங்கிற்கு சாமியாடினார். "கரீனா, ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அந்த எல்லைக்குள்ளேயே, நான் கால் வைக்க மாட்டேன். அதேபோல், அவரும், என் எல்லைக்குள் கால் வைக்க கூடாது என,கறாராக உத்தரவிட்டுள்ளார்.