மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் அரவிந்த்சாமியின் தங்கை, "விபா சினிமாவுக்கு வந்துள்ளார். அவர் "மதில் மேல் பூனையில் கதாநாயகியாக நடித்துள்ளார். கோடம்பாக்கம் கோதாவில் குதித்தது குறித்து விபாவிடம் கேட்டதற்கு,"நான் நடிகர் அரவிந்த்சாமியின் சித்தப்பாமகள். அந்த தகுதிதான் என்னை, "மதில் மேல் பூனை படத்தின், நாயகி ஆக்கியுள்ளது. கதையின் 2ம் பாகம்முழுக்க, காடுகளில் நடக்கிறது என்பதால்,கேரளாவில் அச்சன்கோவில் அருகேஉள்ள, அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு யானை, அட்டைப்பூச்சிகள் தொல்லை அதிகம். கேமரா முன்நின்று திரும்புவதற்குள், உடம்பு முழுக்கஅட்டைப் பூச்சிகள் ஏறி விளையாடும்.அவை ரத்தம் குடிப்பதற்குள், மூக்குப்பொடியை தூவினால் சுருண்டு விழும். இப்படி அட்டைப் பூச்சிகளிடத்தில் அகப்பட்டுக் கொண்டு, அங்கிருந்து படப்பிடிப்பை முடித்து திரும்புவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது என்றார் விபா.