விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தேசிய விருதுக்கு பிறகு பிரபலமாகியுள்ள தம்பி ராமையா ஆரம்பத்தில் மிகவும் வறுமை நிலையில் இருந்த சாதாரண நடிகர். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர். வடிவேலு குழுவில் சேர்ந்து அவருக்கு காமெடி டிராக்குகளை எழுத ஆரம்பித்தார். பல படங்களில் அவருடன் நடிக்கவும் செய்தார். வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் வடிவேலுக்கு ஒரு கதை எழுதினார். அதுதான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். பலகோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அட்டர் ஃபிளாபாகி தயாரிப்பாளரை பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக்கியது. பின்னர் இவர் ஒரு கூடை முத்தம் என்ற பெயரில் தன் நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஒரு படம் இயக்கினார். இப்போது அந்தப் படம் என்னாயிற்று என்றே தெரியவில்லை.
மைனா படத்தின் மூலம் அதிர்ஷ்டக்காற்று அடிக்க இப்போது பிசியான நடிகராகிவிட்டார். லட்சக் கணக்கில் தினசரி கூலி பெரும் காஸ்ட்லியான நடிகராகவும் மாறிவிட்டார்.
இப்படி... தான் கடந்து வந்த பாதைகளை சுயசரிதையாக எழுதி வருகிறார். அதற்கு அனுபவ முகடுகள் என்று தலைப்பும் வைத்திருக்கிறார். அதோடு அன்னைமடி என்ற பெயரில் ஒரு முதியோர் இல்லமும் கட்டி வருகிறார்.
எல்லாம் இருக்கட்டும் தம்பியண்ணே... உங்களை நம்பி கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து படம் தயாரித்த தயாரிப்பாளர் பெரும் கடனில் இருக்கிறாரே அவருக்கு ஏதாவது உதவி செய்யுங்களேன்...