தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
என் மகன் விஜய் அழகன் அல்ல என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். பீனிக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்துள்ள புதிய படம், மதில் மேல் பூனை. இதில், விஜய் வசந்த் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். பரணி ஜெயபால் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக எஸ்.ஏ.சி. பேசுவதற்கு முன்பாக விஜய் வசந்த்தின் நண்பரும், நடன இயக்குநருமான விஜய் ஆதித்ராஜ் பேசுகையில் விஜய் வசந்த் அடுத்த இளையதளபதியாக வருவார் என்றார். அதற்கு பதிலளித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமாவில் இப்போது யதார்த்தமாக இருக்கும் கதாநாயகர்களே ஜெயிக்கிறார்கள். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இப்போது அப்படி இல்லை. பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்க வேண்டும். என் மகன் விஜய் கூட அழகான நடிகர் அல்ல. யதார்த்தமாக இருப்பார். கதாநாயகன் என்றால், அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று இப்போதைய ரசிகர்கள் நினைக்கிறார்கள். ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு. இப்போது வரும் கதாநாயகர்களுக்கு இதுதான் பலம். விஜய் வசந்தும் யதார்த்தமாக இருக்கிறார். அவரும் விஜய் போல வர என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.