சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைச் சொல்லும், "வனயுத்தம் பட நாயகி ஷிகா, தெரு நாய்களிடத்தில் பரிவு காட்டுபவர். அவர் கூறுகையில்,"கன்னடப் படங்களில் நடித்து கொண்டிருந்த நான், இயக்குனர் மதுமிதாவின், "கொல கொலயா முந்திரிக்கா மூலம், தமிழுக்கு வந்தேன். "விண்மீன்கள் படத்தில் நடித்தேன். அதில், நல்ல பெயர் கிடைத்தது. இப்போது சந்தன வீரப்பனின் கதையைச் சொல்லும், "வனயுத்தம் படத்தில் காட்டுவாசிப் பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக, மேக் - அப் போட்டு கொள்ளாமல், காடு, மலை பகுதிகளில் சிரமப்பட்டு நடித்தேன். சினிமாவை தாண்டி, சமூக சேவை செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். தெரு நாய்கள் மீது, கொள்ளைப் பிரியம். தெருநாய்களை எங்கு பார்த்தாலும், அவைகளுக்கு உணவு வாங்கி தருவேன். என் கண் முன்னால் யாராவது, தெரு நாய்களை துன்புறுத்தினால் சண்டைக்கு போயிருவேன் என்கிறார்.