சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
நடிகை ரம்மா இரண்டு ஆண்டுகளுக்கு தொழிலதிவர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடா நாட்டில் செட்டிலாகிவிட்டார். அவர் முன்பு தன் அண்ணன் வாசுவுடன் இணைந்து சில படங்களை தயாரித்தார். த்ரீ ரோசஸ் என்ற படம் எடுத்தார். ஜோதிகா, லைலாவுடன் ரம்பாவும் நடித்தார். இந்தப் படம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. பெரும் கடனில் சிக்கினார் ரம்பா. இந்த நிலையில் இழந்த பணத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். அந்தபடமும் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் பெரும் பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் ரம்பா.
ரம்பாவின் அண்ணன் வாசுவிற்கு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க ஆசை இருந்து கொண்டே இருந்தது. எப்படியோ தங்கை ரம்பாவின் சிபாரிசில் மீண்டும் படம் தயாரிப்பில் இறங்கி விட்டார். மலையாள இயக்குனர் சித்திக்கின் உதவியாளர் சுரேஷ் என்பவர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரு படத்தை தயாரிக்கிறார். ஹீரோ தேவயானியின் தம்பி நகுல். விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.