தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் இயக்குவதில் வல்லவர். இவர் இயக்கிய சிந்தாமணி கொலை வழக்கு மலையாளத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே படத்தை தமிழில் எல்லாம் அவன் செயல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. இதுதவிர தமிழில் வாஞ்சிநாதன், ஜனா படங்களை இயக்கினார். இப்போது இவர் மலையாளத்தில் ஒரு படம் இயக்கி கொண்டிருக்கிறார். இந்தப் படம் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று கதைகளை கொண்டதாக இந்தப் படம் இருக்கிறது. ஒரு கதை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றியது. இதில் கோட்சேவாக பிருத்விராஜ் நடிக்கிறார். மற்றொரு கதை மாவோயிஸ்டுகளை பற்றியது. மூன்றாவது கதை நக்சலைட்டுகள் பற்றியது. இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கவும் ஷாஜி முடிவு செய்துள்ளார். எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்த ஆர்.கே. ஒரு கதையில் நடித்து தயாரிக்கிறார். மற்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.