ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ராட்டினம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்வாதி. அந்த படத்தில் நடித்து வந்தபோதே அப்புக்குட்டி நடித்துள்ள மன்னாரு படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக கமிட்டானார். அதையடுத்து அரசு விடுமுறை என்ற படத்தில் நடிப்பதற்கு சம்மதம் சொன்ன அவர், திடீரென்று அந்த படத்திலிருந்து வெளியேறி விட்டார். ஏலகிரியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அங்கு தனக்கு சரியான வசதிகள் செய்து தரவில்லை என்றொரு புகாரை முன்வைத்து விட்டு அவுட்டோரில் இருந்தே வெளியேறியிருக்கிறார்.
இப்படி அந்த படத்திலிருந்து ஸ்வாதி வெளியேறியதற்கு காரணம், பாலசேகரன் இயக்கும் ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படம்தான் என்கிறார்கள். இனி நடித்தால் முன்னணி ஹீரோ, முன்னணி இயக்குனரின் படங்கள்தான் என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்வாதி, இந்த நேரத்தில் புதுமுக நடிகர்களின் படங்களில் நடித்தால் தனது ரேஞ்ச் உயராது என்பதற்காகவே அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். அதோடு, ஆரம்பத்தில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த ஸ்வாதி, இப்போது கதைக்கு தேவையான அளவு கிளாமர் காட்டி நடிக்க தயாராக இருப்பதாகவும் கோலிவுட் இயக்குனர்களுக்கு இனிப்பு செய்தி வாசித்திருக்கிறார். அதனால் இதுவரை ஸ்வாதியின் பெயரைக்கேட்டாலே முகம் சுழித்துக்கொண்டு போன இயக்குனர் களெல்லாம் இப்போது முகமலர்ச்சியுடன் அவரிடம் கதை சொல்ல அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.