Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் எள்ளு பேரன்!!

Niranjan Bharathi wrote song for Paagan
தமிழ் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு பாகன் படமும் ஒரு உதாரணம். புதுமுக இயக்குநர் அஸ்லாம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் பாகன். ஒரு யதார்த்தமான கதையை பொள்ளாச்சி பின்னணியில் ‌கதையாக்கி உள்ளார் இயக்குநர். முதன்முறையாக ஸ்ரீகாந்த் அம்மாவாக கோவை சரளா நடித்துள்ளார். படத்தில் ஸ்ரீகாந்த், கோவை சரளா, பரோட்டா சூரி ஆகியோர் ஆடி பாடுவதாக ஒரு பாடலை தயார் செய்துள்ளார் இயக்குநர். ‌ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஒரு குத்து பாடலை மிக சரளமாக எழுதி உள்ளார் என்பது தான் ஆச்சர்யம். "சிம்பா சம்பா ரம்பா... ஏஞ்சலினா அவ லவ்வர்னா..." என்று ஏகத்துக்கும் வார்த்தைகளை கொட்டி எழுதி விட்டாராம். பாடல் வெளிவந்தால் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெரும் என்று இப்போதே படக்குழு உற்சாகமாகியுள்ளனர்.

Tags »
Niranjan Bharathi, wrote, song, Paagan, பாகன், படத்திற்காக குத்துப்பாட்டு, எழுதிய, பாரதியார், எள்ளு பேரன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (11)

ரஜினி நாகராஜ் - Tiruchi,இந்தியா
2012-09-07 15:51:46 Report Abuse
 ரஜினி நாகராஜ் பாட்டை கேட்டு விட்டுத்தான் கருத்து சொல்ல நினைத்தேன். ஒரு ஆபாச வார்த்தை கூட இல்லை. காதல் பாட்டு என்ற பெயரில் ஆபாச வார்த்தைகளுடன் பாடல் எழுதுவதைக் காட்டிலும், தைரியமாக இப்படி எழுதுவது தவறே இல்லை. வாழ்த்துக்கள் நிரஞ்சன். வாலி மாதிரி எல்லா வகை பாட்டுக்களும் எழுதுங்க!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
2012-08-30 20:35:28 Report Abuse
 விக்ரம் ரவிசங்கர் காவடி சிந்து, நையாண்டி, குறவன் குறத்தி போன்ற தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்றாக குத்துப்பாடலையும் ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை...?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
murugananthan - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-08-30 10:05:22 Report Abuse
murugananthan சமூக சிந்தனை பாடல்களை உங்களிடம் எதி்ர்பார்க்கிறோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GOWSALYA - Denhelder,நெதர்லாந்து
2012-08-30 01:23:24 Report Abuse
GOWSALYA மகா கவி பாரதியாரின் பெயரைக் கெடுக்க வந்த எள்ளான பேரன் ?????..தலைவிதி....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
christ - chennai,இந்தியா
2012-08-29 20:22:32 Report Abuse
 christ குத்து பாடல்களில் உங்கள் கவனம் போக வேண்டாம் அது தமிழ் படங்களுக்கு ஆரோக்கியம் ஆனது அல்ல !!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in