நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்..."இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | "தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
இயக்குநர் மிஸ்கின் படம் என்றாலே அவரது படத்தில் கண்டிப்பா ஒரு மஞ்சள் புடவை, இல்ல ஒரு பார் பாட்டு, இல்ல ஒரு கானா பாட்டு இப்படி ஏதேனும் ஒரு பாட்டு மக்கள்கிட்ட போய் சேரும். அந்த வரிசையில் ஜீவா நடிக்கும் முகமூடி படத்தில் மஞ்சள் புடவை பாட்டு கண்டிப்பா இல்ல. ஆனால் குடிகாரர்களின் சோகத்தை சொல்லும் பாட்டை சில தத்துவம் கலந்து எழுதியிருக்கும் மிஸ்கின் கிட்ட இந்தபாட்டை பற்றி கேட்டதும், அவர் உணர்ச்சி மிகுந்து சொன்ன சில வார்த்தைகளை அப்படியே எழுதி இருக்கோம். தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில் மக்கள் அதிகமா கூடுறாங்க. ஒன்று கோயில், இன்னொன்று குடிக்கிற இடம். ரெண்டிலுமே எனக்கு அனுபவம் இருக்கும். அதான் அந்த வலியை அப்படியே பதிவு பண்ணியிருக்கேன். வெறும் கமர்ஷியல் எண்ணத்தோடு பார்க்க வேண்டாம். உறவை பிரிந்தவன், காதல் பிரிவு, கடன்சுமை, கஷ்டப்படுறவன் என்று அத்தனை பேரும் இதில் உண்டு. அந்தபாட்டில் ஒரு வரி, விடிஞ்சா வாழ்க்கை சோகம்... என்று திருநங்கைகளுக்காக எழுதி இருப்பேன். அவங்க கதையை கூட சொல்லி இருக்கேன். குடிச்சா மறந்து போகும் என்று எழுதி இருக்கேன். வெறும் கிளர்ச்சிக்காக மட்டும் இல்ல, இந்த தமிழ் சமுதாயத்தின் சோகத்தை இந்த பாட்டில் முடிந்தவரை பதிவு பண்ணியிருக்கேன். படத்துக்கு ரொம்ப முக்கியமான பாட்டு. இதை மெலடியா பதிவு பண்ணியிருக்கோம். மேலும் மூன்று படத்திற்கு உழைக்க வேண்டியதை இந்த ஒரு படத்திலேயே உழைத்து இருக்கேன் என்று சொல்லி முடித்தார் மிஸ்கின்.