உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு பேட்டி | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல்தனுசுக்கு "செட் ஆகலை | விரைவில்..."அங்குர் அரோரா மர்டர் கேஸ் | "என்னை யாருக்குமேஅடையாளம் தெரியலை | அரசியல் தலைவராகிறார் ஸ்ரேயா:விருதுக்கு குறி வைக்கிறார் | நஸ்ரியாவுக்கு நல்ல நேரம் | வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! |
எனக்கு ஏற்ற வாய்ப்பு மலையாள படத்தில் மட்டும்தான் கிடைத்திருக்கிறது என்று நடிகை சோனா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா. மிருகம், குசேலன், கோ உள்ளிட்ட படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதேபோல் தெலுங்கு, மலையாள படங்களிலும் கவர்ச்சியாகவே நடித்து வந்தார். தனது சொந்த வாழ்க்கையை படமெடுக்கப்போவதாக அறிவித்த இவர், தற்போது அந்த படத்துக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த படம் தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக் கொண்டு வரும் எனக் கூறும் இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக கூறி வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் தயாராகும் கதயல்லித்து ஜீவிதம் என்ற படத்தில் கவர்ச்சியில்லாத ஒரு நல்ல வேடத்தில் நடிக்க சோனாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை மற்றொரு பரிணாமத்தில் வெளிப்படுத்தும் முடிவில் இருக்கிறார். இதுகுறித்து சோனா கூறுகையில், எல்லா மொழிப் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்கவே என்னை அழைக்கின்றனர். மலையாளத்தில் மட்டுமே எனக்கு ஏற்ற நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. எனவே மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன், என்றார்.