தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தப்பான படங்களில் நடித்ததன் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன் என்று நடிகை லட்சுமி ராய் கூறியுள்ளார். லட்சுமிராய் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. கிரிக்கெட் வீரர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தனி விமானத்தில் வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கெல்லாம் பதில் அளிக்காமல் இருந்த லட்சுமி ராய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதில் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. சினிமாவுக்கு வந்த புதிதில் இவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தேன். பதில் சொல்வதையும் தவிர்த்தேன். ஆனால் இனி என்னைப் பற்றிய வதந்திகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப் போகிறேன். சினிமாவில் எனக்கு குரு கிடையாது. எந்த பின்புலமும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் தப்பான படங்களில் நடித்தேன். அதில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளது. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவசரப்படவில்லை. முன்னணி நடிகையாகும் ஆசையும் இல்லை. நம்பர் ஒன் இடத்துக்கு போனால் அதை தக்க வைப்பது கஷ்டம். அதன்பிறகு மார்க்கெட் விழுந்து, வீட்டுக்கு போகவும் தயாராக இருக்கவேண்டும். நான் நிதானமாக அடியெடுத்து வைக்கிறேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தனி விமானத்தில் வந்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. மலையாளத்தில் எனக்கு நல்ல படங்கள் வருகின்றன. ஆனால் தமிழ், தெலுங்கில் என்னை கவர்ச்சியாகவே பார்க்கிறார்கள், என்று கூறியுள்ளார்.