தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரத்தின் கேரியர் கொஞ்சம் பின்தங்கி இருக்கும் காலம் இது. கேட்பார் பேச்சை கேட்டு ஆக்ஷன் அடிதடியில் இறங்கி, பன்ஞ் டயலாக் பேசி இப்போது பன்ஞ்சராகி கிடக்கிறார். காதல் படத்தில் மெக்கானிக் இளைஞன், எம் மகன் படத்தில் அப்பாவுக்கு பயந்த பிள்ளை, கண்டேன் காதலை படத்தில் அன்பைத் தேடும் பணக்கார இளைஞன், வெயில் படத்தில் பாசக்காரத் தம்பி, இப்படியான கேரக்டர்கள்தான் பரத்துக்கு பொருத்தமாக அமைந்தது. அவைகள் வெற்றியும் பெற்றது. ஆனால் இதிலிருந்து திடீரென ஆக்ஷனுக்கு ஜம்ப்பானார், பழனியில் ஆரம்பித்தார். பேரரசுவின் பன்ஞ்சு டயலாக்குகளை பேசி பயமுறுத்தினார். அதிலிருந்து பரத்தின் கேரியர் மாறிப்போனது. முன்னர் ஒப்புக் கொண்டு நடித்த திருத்தணி படமும் இப்போது வெளிவரப் போகிறது.
ஒரு கட்டத்தில் தனது தவறான முடிவை மனதால் ஒப்புக் கொண்ட பரத், ஆக்ஷன் ஏரியாவை மூட்டை கட்டி வைத்துவிட்டு புதுமையாக, வித்தியாசமாக ஏதாவது செய்து இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதுதான் சசியின் 555 படம். இந்தப் படத்தின் கதை பற்றியோ, அதில் பரத்தின் கேரக்டர் பற்றியோ யாருக்கும் தெரியாது. தனது புதிய கெட்-அப் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அதிகம் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருத்தணி பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். நீண்டதாடி, அடர்ந்த தலைமுடி, மெலிந்த தேகம் என ஆளே மாறியிருந்தார். இந்த தோற்றம் குறித்து கேட்டதற்கு "புது படத்தின் கெட்-அப் அவ்வளவுதான்" என்பதோடு முடித்துக் கொண்டார். ஆனால் இது 555 படத்தின் தோற்றங்களில் ஒன்று என்கிறது பரத்துக்கு நெருங்கிய வட்டாரம்.