ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பொங்கலுக்கு புதுச்சேனல் துவங்கபோவதாக சாக்ஸ் பிக்சர்ஸ் தலைவர் சக்சேனா அதிரடியாக அறிவித்து இருக்கிறார். ப்ரியாமணி இரட்டை வேடத்தில் நடித்துள்ள சாருலதா படத்தை சக்சேனா வெளியிட இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. விழாவில் பேசிய சக்சேனா, இந்த சக்சேனா பிக்சர்ஸ் எப்படி ஆரம்பிக்கப்பட்டது, எதுக்கு ஆரம்பிக்கப்பட்டது. 20 வருஷத்துக்கு முன்னாடி பூமாலை என்ற வீடியோ சேனலில் வெறும் ரூ.750 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு படிப்படியாக முன்னேறி தனியார் சேனல் ஒன்றில் சாதாரண ஒரு ஆளாக வேலையில் சேர்ந்து பின்னாளில் மேலாளர், சி.இ.ஓ., ஆனேன். பின்னர் பல்வேறு பிரச்னைகளால் வலுக்கட்டாயமாக அந்த வேலையை விட்டு வந்தேன். பழசை என்றும் மறக்க முடியாது. 20 வருஷத்தில் நான் இவ்வளவு தூரம் வந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் நிறைய படங்கள் தயாரித்து இருக்கிறேன். ஆனால் எனது பெயர் எதிலும் வந்திருக்காது. நான் கடந்து வந்த பாதை, அதில் சந்தித்த போராட்டங்கள் எல்லாவற்றையும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால் பேசாமல் இருக்க முடியவில்லை.
சின்ன செடிய தண்ணீர் ஊற்றி வளர்த்து அது பெரிதாகி மரமான பின்னர் ஒரு பெரிய சூறாவளி வந்து தாக்கி மரம் வேரோடு சாய்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் என் நிலைமை. அப்போதும்கூட வேரை பிடித்து மேலே வா என்று சொல்லியிருந்தால் கூட நான் மேலே வந்திருப்பேன். ஆனால் வேரோடு என்னை பிடிங்கி எரிந்து விட்டனர். ஆபத்தில் உதவாத நண்பனும், தாகத்திற்கு பயன்படாத தண்ணீரும், பசிக்கு உதவாத உணவும் நல்லதுக்கு இல்லை என்று ஆன்றோர்கள் சொன்னது தான் ஞாபகத்திற்கு வந்தது. என்னால் வளர்ந்தவர்கள் எல்லாம் நிறையபேர். ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது எனக்கு யாரும் உதவமுன் வரல. காரணம் எல்லாம் பயம் தான். என்னைப்பொறுத்தவரை எல்லாவற்றையும் முகத்திற்கு நேராக சந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். எனக்கு தெரிந்தது எல்லாமே சினிமா தான்.
இந்த நேரத்தில் உங்கள் எல்லோர் இடத்திலும் ஒன்றை சொல்கிறேன். பொங்கலுக்கு நான் புதிதாக ஒரு டி.வி. சேனல் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன். இது போட்டிக்காவோ, பொறாமைக்காவோ இல்லை. சிறுபட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கவே நான் டி.வி. சேனல் தொடங்குகிறேன். எனக்கு தெரிந்த ஒரே தொழில் சினிமா தான். இப்போது சிவானி என்ற படத்தை தயாரிக்கிறேன். கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்த கோகுல் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் முடிந்துவிட்டது. இப்படத்தில் பணியாற்றுபவர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லியிருக்கிறேன். நாம் தயாரிக்கும் இந்தப்படம் குறைந்தபட்சம் 4 பிலிம்பேர் விருதுகளையாவது வாங்க வேண்டும் என்று. நான் சொன்ன வார்த்தையை ஏற்று படக்குழுவினரும் அதற்கு ஏற்றவாறு உழைத்து வருகிறார்கள்.
இப்போது எனது முதல் வெளியீட்டு படமாக ப்ரியாமணியின் சாருலதா படம் வெளியாக இருக்கிறது. படத்தை பார்த்தேன் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்தபடத்திற்காக ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய புதிய முயற்சியை எல்லோரும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, சக்ஸேனாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் முழு அதரவு அளிக்கும் என்றார். இதேபோல் விழாவில் பங்கேற்றவர்களும் சக்ஸேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில், நடிகைகள் ப்ரியாமணி, சரண்யா பொன்வண்ணன், நடிகர்கள் நந்தா, கிருஷ்ணா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாக்யராஜ், சக்தி சிதம்பரம், கண்ணன், பேரரசு, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.