கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா மீண்டும் தனது காதல் மனைவி ரமலத்துடன் சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா கடந்த வருடம் ஜூலை மாதம் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வீடுகள், சொத்துக்களை எழுதி வைத்து செட்டில் செய்தார். பின்னர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள தயாரானார். மும்பையில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். நயன்தாராவும் பிரபுதேவாவுக்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்து மதத்துக்கும் மாறினார்.
ஆனால் திடீரென அவர்கள் திருமணம் நின்று போனது. இருவரும் காதலை முறித்துக் கொண்டு தனித்தனியாக பிரிந்து விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை. முதல் மனைவி, குழந்தைகளை பிரபுதேவா சந்திக்கக்கூடாது என நயன்தாரா தடை போட்டதாகவும் அதை அவர் ஏற்காததால் தகராறு மூண்டு, பிரிந்ததாகவும் செய்திகள் வந்தன. நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்திப் படங்களை இயக்கி வந்தார். இந்த நிலையில் திடீரென சென்னை வந்து ரம்லத்தை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ரம்லத்தையும், குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்து சென்று சில தினங்கள் தன்னோடு வைத்துக் கொண்டு பிறகு சென்னை அனுப்பி வைத்துள்ளார். பழைய கசப்புகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்களாம்.