Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பொதுமக்களிடம் அடி வாங்கிய ஹீரோ!

Public beat new heroசித்திரைத் திங்கள் என்ற பெயரிட் உருவாகி வரும் படத்தின் ஹீரோவை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலுக்கு நூறு வருடம் ஆயுள் என்றால், காமத்துக்கு ஐந்தே நிமிடம் என்ற கருவை மையமாக வைத்து, சித்திரைத்திங்கள் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஸ்வந்த், நக்கீரன் என்ற இரண்டு கதாநாயகர்களும், ஸ்ரீரேகா, ஸ்வாதி என்ற இரண்டு கதாநாயகிகளும் அறிமுகம் ஆகிறார்கள்.

கதை - திரைக்கதை - வசனம் எழுதி படத்தை தயாரிப்பதுடன், இயக்கவும் செய்கிறார் டைரக்டர் ஆர்.மாணிக்கம். சரத்பிரியதேவ் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது தூரத்தில் ஒரு மயில் தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. உடனே கதாநாயகி ஸ்ரீரேகா காரை நிறுத்தி அந்த மயிலை நோக்கி நடந்தார். அவர் தனியாக செல்வதைப் பார்த்த கதாநாயகன் நக்கீரன் பின் தொடர்ந்தார். அதை தவறாக புரிந்து கொண்ட கிராமத்து மக்கள், ஹீரோ நக்கீரனை அடித்து உதைக்க தொடங்கினார்கள். ஓடிவந்த படக்குழுவினர், மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி நக்கீரனை மீட்டனர்.  இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags »
பொதுமக்களிடம், அடி, வாங்கிய, ஹீரோ,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in