உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! | பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்! | நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! | நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்!! போலீசில் புகார் | நானும் ரவுடிதான்டா, கோதாவில் குதிக்கிறார் கொலவெறி அனிருத்! | கார்த்திக்கிற்கான கதையை முடிவு செய்வது சூர்யாதானாம்! | விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்! | ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா | விரைவில் மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா |
"சூழ்நிலை பட இயக்குனர் செந்தூரம், அடுத்து, "த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இதற்காக "லொகேஷன் பார்க்க, அந்தமான் காட்டுப் பகுதிக்கு படக்குழுவினர் சென்றபோது, அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை துரத்தினர். இதனால், வேறு பகுதிகளுக்கு சென்று, "லொகேஷன் பார்த்ததாக சொன்ன செந்தூரனிடம், "ஆதிவாசிகள் துரத்தியதற்கான காரணம் என்ன? என்று கேட்டபோது, "சமீபத்தில் சிலர், ஆதிவாசிகளை நிர்வாணமாக நடனம் ஆட வைத்து, அதை படம் பிடித்து வெளியிட்டு விட்டனர். இதனால், கேமராவோடு யாரைப் பார்த்தாலும், அவர்கள் ஆவேசமாகி விடுகின்றனர், என்றார்.