Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.எஸ்.வி.க்கு விழா எடுக்கும் ஜெயா டி.வி.,

13 ஆக, 2012 - 16:01 IST
எழுத்தின் அளவு:

ஜெயா டி.வி. தொடங்கி 14வது வருட விழாவை இந்த வருடம் சிறப்பாக கொண்டாட உள்ளனர். அதற்காக இந்த விழாவில் ஒரு மாபெரும் இசை மேதையை பாராட்ட இருக்கின்றனர். அவர் தான் மெல்லிசை ‌மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 700க்கும் அதிகமான திரைப்படங்கள், 6000க்கும் அதிகமான பாடல்கள், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள், 60 வருட திரை இசை அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மெல்லிசை மன்னரின் இசை பயணத்தில் ஜெயா டி.வி. பங்கு கொள்ள இருக்கிறது.

ரசிகர்களின் மனதில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த இசைமேதை எம்.எஸ்.வி., 1928ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காடு எழப்புல்லி கிராமத்தில் சுப்பிரமணியன் நாராயண குட்டி என்பவருக்கு மகனாக பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு இசை மீது அலாதி பிரியம். இசை மீது பிரியம் கொண்ட இவருக்கு மானசீக குருவாக திரு நீலகண்ட பாகவதர் கிடைத்தார்.

‌ஆரம்பகாலத்தில் இவர் ஒரு நடிகராகவே சினிமாவில் வர விரும்பினார். இதற்காக திரைப்பட தயாரிப்பு அலுவலங்களிலும், படப்பிடிப்பு தளங்களிலும் சாதாரண ஊழியராக பணிபுரிந்தார். பின்னர் கே.வி.மகாதேவன் அவர்களின் இசைக்குழுவில் பின்னணி குரல் கொடுக்கும் பாடகராக அறிமுகமானார். 1950-ம் ஆண்டு ஜெனோவா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1952-ல் பிரபல இசையமைப்பாளர் சுப்புராமன் அவர்களின் திடீர் மறைவுக்கு பின்னர் தேவதாஸ் மற்றும் காதல் திரைப்படங்களின் இசையை முடித்து கொடுக்கும் வாய்ப்பு எம்.எஸ்.வி. மற்றும் ராமமூர்த்தி அவர்களுக்கு கிடைத்தது. அதிலிருந்து இந்த இரட்டையர்களின் இசைப்பயணம் ஆரம்பமானது. இவர்களின் முதல் வெற்றி திரைப்படமாக என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய பணம் படம் வெளிவந்தது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இவர்களுக்கு 1963-ம் ஆண்டு ஒரு திரைப்பட விழாவில் சிவாஜி அவர்களால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இன்று நம் அனைவராலும் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.வி., அவர்கள் தான். தமிழ் படங்கள் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இவரின் மகத்தான பங்களிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசும், அரசுசார நிறுவனங்களும், ரசிகர்களும் அளித்த விருதுகளும் வாழ்த்துக்களும் ஏராளம். இருந்தும் இவருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் எதுவும் இன்ற‌ளவும் கிடைக்காமல் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. இந்நிலையில், இப்போது ஜெயா டி.வி. சார்பில் ‌எம்.எஸ்.வி., அவர்களுக்கு பொதுமக்கள் தேர்வு செய்த உயரிய பட்டம் ஒன்று  வழங்கப்பட இருக்கிறது. இதற்காக வருகிற 22ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், நினைத்தாலே இனிக்கும் என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்ட இசை விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது ஜெயா டி.வி.

முன்னதாக கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவுக்கு, "என்றென்றும் ராஜா" என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்ட விழாவை ஜெயா டி.வி., எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ச.எ.ஹாஜாMOHAIDEEN - Muscat,ஓமன்
14 ஆக, 2012 - 10:53 Report Abuse
 ச.எ.ஹாஜாMOHAIDEEN ஆயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இன்னிசை இறைவனுக்கு இந்த பாராட்டு விழா மட்டும் அல்ல மத்திய அரசின் உயரிய விருதுகள் அனைத்தும் கிடைக்க தகுதியான ஒரே இசை அமைப்பாளர் நமது விஸ்வநாதன் சார் தான். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
Rate this:
கணபதி - chennai,இந்தியா
14 ஆக, 2012 - 07:35 Report Abuse
 கணபதி விஸ்வநாதன் அவர்களுடன் ராமமூர்த்தி அவர்களும் சேர்ந்துதான் இவ்வளவு பெரிய இசை வெற்றியை கொடுத்திருக்கும்போது ராமமூர்த்தி அவர்களை மட்டும் ஏன் சேர்ந்து கௌரவிக்கப்படவில்லை.
Rate this:
வெங்கட்ராமன் - chennai,இந்தியா
14 ஆக, 2012 - 01:53 Report Abuse
 வெங்கட்ராமன் நல்ல விழா, மேலும் நீங்கள் உங்கள் இசை கேட்க வேண்டும் என ஆசை படுகிறோம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in