ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வடிவேலு, கருணாஸ், கஞ்சா கருப்பு, சந்தானம் ஆகியோரைத் தொடர்ந்து காமெடி நடிகர் வையாபுரியும் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளவர் காமெடி நடிகர் வையாபுரி. இவர் முதன்முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், மழையில் நனைந்த தங்கம். இது, ஒரு கணவன், மனைவி, 2 குழந்தைகளை சுற்றி வரும் கதையம்சம் உள்ள படம். டைரக்டர் பிரபு சாலமனிடம் உதவி டைரக்டராக இருந்த கிருஷ்ணா, இந்த படத்தின் கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்குகிறார். காமெடி மற்றும் சென்டிமெண்ட் அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது.