அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வல்லரசு மகாராசனிடம் உதவி இயக்குநராக "அரசாட்சி", "ஆஞ்சநேயா" போன்ற படங்களில் வேலை பார்த்தவர் சேகர்.ஜி. இவர் இப்போது நடித்து இயக்கி வெளிவர உள்ளபடம் "பாளையங்கோட்டை". பாளையங்கோட்டையில் சுமார் 10வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார். திருநெல்வேலி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தை படமாக்கி உள்ளார். படம்குறித்து சேகர்.ஜி செல்லும்போது, இந்த படத்தை வேறு ஒரு புதுமுகம் நடிக்க தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன். அவரோ இதில் நீங்களே ஹீரோவாக நடித்து விடுங்கள் என்று வற்புறுத்தி கேட்டு கொண்டார். அதனால் நானே ஹீரோவாக நடித்துவிட்டேன்.
படத்தில் பெரிய கதை என்று ஒன்றும் இல்லை, பெரிய பில்ட்-அப்பும் கிடையாது. தான் எப்படி போனாலும், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஹீரோ நினைக்கும் படம் தான் பாளையங்கோட்டை. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறேன். அப்புறம் படத்தின் ஹீரோயின் இன்பநிலா பற்றி சொல்லனும். டைரக்டர் தங்கர்பச்சானின் கண்டுபிடிப்பு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்திருப்பவர். படம் வருவதற்கு முன்பே நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்தபடத்தில் நான் ஹீரோ என்ற நினைப்பில் படம் எடுக்கவில்லை. படத்தில் கதையின் தேவைக்கான நாயகன் அவ்வளவுதான். டான்ஸ், சண்டை என்று எல்லாவற்றையும் முறைப்படி பயிற்சி எடுத்து, உயிர் கொடுத்து உழைத்திருக்கிறேன். சென்சாரில் சில காட்சிகளை மாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டதால், அதற்கு மட்டும் புதிதாக பத்து நாட்கள் ஷூட்டிங் செய்தோம். இனி படத்தை பற்றி ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார் டைரக்டரும், நடிகருமான ஜி.சேகர்.