வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, "கண்டேன் காதலை" படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான கார்கி, பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது நான் ஈ படத்தில் எல்லா பாடல்களையும் இவரே எழுதி ராஜமவுலியின் மொத்த பாராட்டையும் பெற்றுள்ளார். அந்த வேகம் குறைவதற்குள், இதோ அவரது வரிகளில் ஏகப்பட்ட படங்கள் வர இருக்கின்றன. அவற்றுள் துப்பாக்கி, மாற்றான், கடல், நிமிர்ந்து நில், முகமூடி, ஐ, ஒரே ஞாபகம் என்று கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர நிறைய படங்களுக்கும் பாடல் வரிகள் எழுத கமிட் ஆகி இருக்கிறார். அமைதியின் உருவமாய், அழகான வரிகளின் உயரமாய் விளங்கும் மதன் கார்கி விரைவில் தனது 50வது பாடல் நெருங்குவார் எனத் தெரிகிறது.
வாழ்த்துக்கள் கவிஞரே...!