தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் திலகம் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்தது. இதனால் அரசு, அடையார் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அதற்கு இடம் ஒதுக்கியது. திரையுலகமே திரண்டு அதற்கு பூமி பூஜையெல்லாம் போட்டார்கள். ஆனால் அதன் பிறகு அதனை அப்படியே கிடப்பிலும் போட்டு விட்டார்கள். தி-.மு.கழக தலைவர் கருணாநிதி சிவாஜிக்கு காமராஜர் சாலையில் சிலை வைத்ததோடு நன் நண்பனுக்கு இதுவே பெரிது என்று மணி மண்டபம் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. மணி மண்டம் உடனே கட்ட வேண்டும் என்று நடிகர் சங்கமோ, அல்லது சினிமாவின் இதர அமைப்புகளோ இதுவரை குரல் கொடுக்கவில்லை. தங்கள் பிரச்சினைகளை மட்டும் அரசிடம் பேசி தீர்த்துக் கொண்டனவே தவிர சிவாஜி மணிமண்டபம் பற்றி வாய் திறக்கவே இல்லை. இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அதன் பிறகு போடப்பட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்க, சிவாஜி மணிமண்டபத்துக்கு ஒதுக்கிய இடம் மட்டும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்ணன் பட 150வது நாள் விழாவில் ரசிகர்களின் மனக்குமுறல் வெடித்தது. காமராஜர் அரங்கத்தில் இந்த விழா நடந்தது. இதில் பேசிய இயக்குனர்கள், சிவாஜி ரசிகர் மன்ற பிரமுகர்கள், பி.வாசு உள்ளிட்ட இயக்குனர்கள் தங்கள் மனக்குமுறலை மேடையில் கொட்டியபோது "ரசிகர்கள் அரசே சிவாஜி மணிமண்டபத்தை உடனே கட்டு" என்று கோஷமிட்டனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி இறுதியில் பிரபு பேசும்போது வருத்தம் தொணிக்க தனது ஆதங்கத்தை வெளியிட்டார். "அப்பா சிவாஜிக்கு இன்னும் மணிமண்டபம் கட்டவில்லையே என்று சிலர் இங்கு ஆதங்கத்தோடு பேசினார்கள். ரசிகர்களும் தங்கள் ஆதங்கத்தை பிரதிபலித்தார்கள். அப்பாவுக்கு நான் நினைத்தால் என்னுடைய பணத்தை போட்டு மணி மண்டபம் கட்டிவிட முடியும். ரசிகர்களாக நீங்கள் நினைத்தாலும் பணம்போட்டு கட்டிவிட முடியும். ஆனால் பெரியவர்கள்தான் (அரசாங்கம்) கட்ட வேண்டும். அதுதான் அப்பாவுக்கான அங்கீகாரம், அதுதான் அவருக்கு கிடைக்கும் மரியாதை. அது சீக்கிரம் நடக்கும், நடக்க வேண்டும் என்று உங்களைப்போல நானும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
இதே மேடையில் பிரபு இன்னொரு ரகசியத்தையும் சொன்னார். "சிவாஜி தேர்தலில் போட்டியிட்டபோது திருவையாறு தொகுதியில் நாங்கள் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். அவரை தோற்க விட்டிருக்ககூடாது" இரண்டு பேர் பிரபுவிடம் ஆதங்கப்பட்டு, வருத்தப்பட்டு சொன்னார்களாம். அது ரஜினியும், கமலும். இதை மேடையில் பிரபு சொன்னபோது "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?" என்று ஒரு ரசிகர் அரங்கத்தில் கத்தினர்.
ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சிவாஜியை இன்னும் அவரது தீவிர ரசிகர்களும், அன்னை இல்லமும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் அந்த மாபெரும் கலைஞனை மறந்து விட்டார்கள். எந்த நடிகர் சங்கத்தை சிவாஜி கட்டிக் காத்தோரோ அந்த நடிகர் சங்கம் உள்பட.
"அண்ணே இன்னும் ஒரு வருஷம் பார்ப்போம்ணே அரசாங்கம் மணி மண்டபம் கட்டலேண்ணா நாம நம்ம ஊர்லேயே அண்ணனுக்கு கட்டிருவம்ணே" என்றபடியே கலைந்தனர் ரசிகர்கள். காலத்தை கடந்து சிவாஜியை சுமந்து சென்று கொண்டிருப்பவர்கள் இந்த ரசிகர்கள்தான்.