ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அவரே தயாரித்து இயக்கும் புதிய படம் அம்மாவின் கைபேசி. இதில் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவும், வாகைசூடவா இனியாவும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்து தாய்க்கு 8 மகன்கள், அதில் 6 பேர் திருமணம் செய்து கொண்டு நகர்புறங்களில் செட்டிலாகிவிடுகிறார்கள். கடைசி மகன் அம்மாவுடனேயே கிராமத்தில் இருக்கிறார். இன்னொரு மகன் பொறுப்பில்லாம் சுற்றிக் கொண்டிருக்கிறார். இவர்கள் அனைவரையும் இணைப்பது அம்மாவிடம் இருக்கும் கைபேசிதான். எல்லோரும் அம்மாவை கைவிட்டுவிட கடைசி செல்ல மகன் சாந்தனுதான் அம்மாவை கடைசிவரை காப்பாற்றுபவர். இவர்கள் எல்லோரையும் விட ஊதாரியாக திரியும் மகன் செய்யும் காரியம்தான் படத்தின் முக்கிய அம்சம்.
இதில் தங்கர் காக்கும் ரகசியம் என்ன தெரியுமா. அந்த ஊதாரி மகனாக நடித்திருப்பது அவர்தான். அதை இதுவரை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார். செப்டம்பர் மாதம் படம் வெளிவருகிறது.