சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
பரம எதிரிகள் போல தங்களின் படங்களின் பஞ்ச் டயலாக் வைத்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசிவந்தாலும், நிஜத்தில் நாங்கள் அப்படியில்லை, என் பிரண்ட போல யாரு மச்சான்... என்று கேட்கும் அளவுக்கு நட்பாய் இருக்கிறார்கள் தனுஷ்-சிம்பு இருவரும். சமீபத்தில் துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் எப்படி பேட்டியளித்தனர் என்பதை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனுஷூக்கு பிறந்தநாள். இதற்காக தனது நண்பர்களை அழைத்து பெரிய விருந்தே கொடுத்து இருக்கிறார் தனுஷ். (விருந்து என்றால் தண்ணி பார்ட்டி இல்லாமலா...) இதில் சிம்புவும் பங்கேற்றுள்ளார். சிம்பு தவிர தமன்னா, அனிருத், விஜய் ஏசுதாஸ் அவரது மனைவி உள்ளிட்ட பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். ஆடுகளம் படத்தில் வரும் சேவல் டைப்பில் உருவாக்கப்பட்டு இருந்த கேக்கை தனுஷ் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விடிய விடிய நடந்த இந்த விருந்தில் ஒரே ஆட்டம், பாட்டு கொண்டாட்டம் தானாம். அதேசமயம் இந்த விருந்தில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா மட்டும் மிஸ்ஸிங்காம்.