இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த வருடம் பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை மணந்தார். இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.
திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்திருப்பது பற்றி மம்தாமோகன்தாஸ் அளித்துள்ள பேட்டியில், திருமணத்துக்கு பின் சினிமாவில் நான் அதிக ஆர்வம் காட்டுவதாக பேசுகின்றனர். கல்யாணம் ஆன பின் நடிப்பது தவறல்ல. திருமணத்துக்கு பிறகு நடிக்கக் கூடாது என்று இல்லை. நான் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்தே நடிக்கிறேன். வருடத்துக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜவான் ஆப் வெற்றி மல படத்திலும் திலீப்புடன் மைபாஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.