தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள பட உலகில் தனது மார்க்கெட் சரிந்து வருவதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் நடிகை மீரா ஜாஸ்மீன். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர் மீரா ஜாஸ்மீன். சமீப காலமாக தமிழ், மலையாளத்தில் புதுப்படங்களுக்கு அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது லிசமாயிடே வீடு என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்த மம்மட்டியான், ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள் கடந்த வருடம் ரிலீசாயின. அதற்கு பிறகு படங்கள் இல்லை. மலையாள திரையுலகில் புதுமுக நடிகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரிலீசான படங்களில் புதுமுகங்களே நடித்து இருந்தனர். தற்போது மீரா ஜாஸ்மின் இடத்தை நடிகை ரீமா கல்லீங்கள் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மீராவுக்கு வந்த பட வாய்ப்புகள் சில ரீமாவுக்கு கைமாறி விட்டனவாம். இதனால் மீரா ஜாஸ்மீன் அதிர்ச்சி மற்றும் கவலையில் இருக்கிறாராம்.