பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

மலையாள பட உலகில் தனது மார்க்கெட் சரிந்து வருவதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் நடிகை மீரா ஜாஸ்மீன். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர் மீரா ஜாஸ்மீன். சமீப காலமாக தமிழ், மலையாளத்தில் புதுப்படங்களுக்கு அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது லிசமாயிடே வீடு என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்த மம்மட்டியான், ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள் கடந்த வருடம் ரிலீசாயின. அதற்கு பிறகு படங்கள் இல்லை. மலையாள திரையுலகில் புதுமுக நடிகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரிலீசான படங்களில் புதுமுகங்களே நடித்து இருந்தனர். தற்போது மீரா ஜாஸ்மின் இடத்தை நடிகை ரீமா கல்லீங்கள் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மீராவுக்கு வந்த பட வாய்ப்புகள் சில ரீமாவுக்கு கைமாறி விட்டனவாம். இதனால் மீரா ஜாஸ்மீன் அதிர்ச்சி மற்றும் கவலையில் இருக்கிறாராம்.