ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை எடுத்த ஷங்கரையே மிஞ்சிவிட்டார் டைரக்டர் ராஜமவுலி. சமீபத்தில் அவரது இயக்கத்தில் தமிழ்-தெலுங்கில் வெளியான நான்-ஈ படத்தில் அப்படியொரு கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார். தெலுங்கு சினிமாவில் போல் தமிழ் சினிமாவிலும் ராஜமவுலிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழில் ராஜமவுலிக்கு கிடைத்திருக்கும் புது வரவேற்பையடுத்து அவரது முந்தைய படம் ஒன்றை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரபாஸ், ஸ்ரேயா ஆகியோரது நடிப்பில் வெளிவந்த சத்ரபதி என்ற படத்தை இப்போது தமிழில் டப் செய்து சந்திரமவுலியாக வெளியிட உள்ளனர். தமிழ் டப்பிங்கிற்கான உரிமையை சதீஷ் வாங்கியுள்ளார். லவ், ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என்ற கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கும் சந்திரமவுலி செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. தமிழில், ராஜமவுலியின் மாவீரன், நான் ஈ படங்கள் வெற்றி பெற்றதைபோல் சந்திரமவுலியும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.