ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எனது கணவர் சம்மதத்துடன் மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன்; தொடர்ந்து நடிப்பேனா, இல்லையா என்பது என் கணவர் முடிவில்தான் உள்ளது, என்று நடிகை நவ்யா நாயர் கூறியுள்ளார். அழகிய தீயே, சிதம்பரத்தில் அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட தமிழ் படங்களிம் நடித்தவர் நவ்யா நாயர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின், கணவருடன் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சாய் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார். சாய் கிருஷ்ணனுக்கு இப்போது ஒன்றரை வயது ஆகிறது. நவ்யா நாயருக்கு மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய வந்தன. அந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் தட்டிக் கழித்தார். இப்போது, சைஜூ அந்திக்காடு இயக்கும் செய்யும் `நம்மோட வீடு என்ற மலையாள படத்தில், மோகன்லால் ஜோடியாக நடிக்க நவ்யா நாயர் சம்மதித்து இருக்கிறார்.
மீண்டும் நடிக்க வந்தது குறித்து நவ்யா அளித்துள்ள பேட்டியில், `நான் என் கணவர் - குழந்தையுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். இதுவரை நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன. நான் சம்மதிக்கவில்லை. `நம்மோட வீடு படத்தின் கதை எனக்கும், என் கணவருக்கும் பிடித்து இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். தொடர்ந்து நடிப்பதை என் கணவர்தான் முடிவு செய்வார், என்று கூறியுள்ளார்.