இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் பேசும் நடிகைகளுக்கே எனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பேன், என்று டைரக்டர் சுந்தர்.சி அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இந்தி, மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களில் பலருக்கு தமிழ் தெரியாது. மலையாள நடிகைகள் பலர் தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் மும்பையில் இருந்து வரும் நடிகைகள் பலருக்கு தமிழ் பேசவும், படிக்கவும் தெரியாது. இந்நிலையில் டைரக்டர் சுந்தர்.சி தமிழ் பேசும் நடிகைகளையே என் படத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் பேசும் நடிகைகளையே என் படங்களில் தேர்வு செய்கிறேன். மொழி தெரியாதவர்களை நடிக்க வைப்பது இல்லை. தமிழ் தெரிந்த நடிகைகளால் மட்டுமே வசனத்தையும் புரிந்து கொண்டு ஈடுபாட்டோடு நடிக்க முடியும். உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். அவர்களை நடிக்க வைப்பதும் எளிதாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களால் சிறப்பாக நடிக்க முடியாது, என்று கூறியுள்ளார்.