இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னையில் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் ஆபாச நடனமாடியது தொடர்பாக விளக்கம் அளிக்க, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான் உட்பட, 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபகுமார், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஏப்., 14ல் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடந்தது. இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், அமெரிக்க பாப் பாடகி கேத்தே பெரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் மற்றும் நடிகைகள் ஆபாச நடனமாடினர். அதை சென்சார் செய்யாமல், "டிவிக்களில் நேரடியாக ஒளிபரப்பினர்.இது தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், பெண்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடத்தில் அரை குறை உடையில் ஆபாச நடனமாட அனுமதியளித்த கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசன், ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா, பி.ஆர்.ஓ., யாஷின் சோப்ரா மற்றும் ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை.ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீஸ் டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. டி.ஜி.பி., வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கோரியிருந்தார். இம்மனு நீதிபதி ஏ.செல்வம் முன் விசாரணைக்கு வந்தது.அமிதாப் பச்சன், சல்மான் கான், கேத்தே பெரி, போலிங்கர், சீனிவாசன், ராஜிவ் சுக்லா, யாஷின் சோப்ரா உட்பட, 12 பேருக்கு நோட்டீஸ் அளிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.