'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய் டிவியில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் காஞ்சனா என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. பூஜா இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். அழகர் இயக்க இந்தத் தொடர் ஒரு அழகான கிராமத்திற்கு நேயர்களை அழைத்துச் செல்கிறது. கல்வி மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் வாழும் காஞ்சனா தன் கிராமத்தையும், தன் தாத்தா பாட்டியையும் பார்க்கும் ஆவலில் அவளது கிராமத்திற்கு வருகை தருகிறாள். காஞ்சனாவை பார்க்கும் அவளது சொந்தங்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்களுக்குள் அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து கவலை தொற்றிக்கொள்கிறது.அதற்கான காரணம் என்ன.அவள் எதிர் நோக்கும் சம்பவங்கள் பல அவளை பல உண்மைகளை அறியத்தூண்டுகிறது. அவள் ஆசையாக விரும்பி வாங்கும் ஒரு பட்டுப்புடவையில் நைதிருக்கும் படங்கள் அவள் வாழ்க்கையில் நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்களை குறிக்கின்றன. ஒரு புதிராக செல்லும் அவளது வாழ்க்கையில் அவருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கின்றன. அதில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? அவள் யார்? எதற்காக அவள் அந்த ஊருக்கு வரவேண்டும்? காஞ்சனா எனபவள் ஒரு தனி நபர் அல்ல, அவளைப்போன்று ஏழு சக்தி உள்ளன என்ற உண்மையை அவள் அறியும் நேரம் வருகிறது. அந்த சக்திகளை அவள் தேடிச்செல்வாளா? இல்லையா? என்று காஞ்சனா தொடரை விருவிருப்பாகவும், மர்மங்கள் நிறைந்த தொடராகவும் வழங்விருக்கிறார் அழகர். வரும் ஜூலை 23ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது காஞ்சனா என்ற புத்தம் புதிய மெகா தொடர்.