பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

எனக்கு படிப்பு சரியாக வராததால் சினிமாவுக்கு வந்தேன், என்று காமெடி நடிகர் சந்தானம் கூறினார். கடலூரில் மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் யோகமும் மனித மாண்பும் என்ற அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் காமெடி நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். சந்தானம் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அவரை விமரிசையாக வரவேற்றனர். இதனால் குஷியான சந்தானம் தனக்கே உரிய ஸ்டைலில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், படிப்பு சரியாக வராததால் நான் சினிமாவுக்கு வந்தேன். தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. மாறாக எல்லாம் நன்றாக நடக்கும், சந்தோஷமாக நடக்கும் என நினைக்க வேண்டும். என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்பதையே சிந்தித்து கவனத்தை திசை திருப்பி வருகிறோம். இறைநிலையோடு இருந்தால் வாழ்க்கையில் கேட்பது மட்டுமின்றி கேட்காததும் கிடைக்கும், என்றார்.