பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
டைரக்டர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதி பகவன் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் ஹீரோ ஜெயம் ரவி நடித்துள்ளார். ஆரம்பத்தில் பல பிரச்னைகளை சந்தித்த ஆதி பகவன் படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக இந்த படப்பிடிப்பு குழு தற்போது தாய்லாந்து சென்றுள்ளது. படத்தில் ஜெயம் ரவி சி.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன் வெளிநாடு சென்று, அங்கு நடக்கும் குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் ஜெயம் ரவி நடிப்பதற்கு பதிலாக டூப் போடலாம் என்று டைரக்டர் அமீர் யோசித்துள்ளார். ஆனால், அதை நிராகரித்த ஜெயம் ரவி, தானே அக்காட்சியில் டூப் போடாமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதன்பிறகு ஜெயம் ரவியை வைத்தே அந்த காட்சியை எடுத்து முடித்தாராம் இயக்குனர். இந்தக் காட்சி பிரமாதமாக வந்திருப்பதாக பட யூனிட்டே ஜெயம் ரவியை பாராட்டியுள்ளது.