மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
என்னை நிறைய பேர் அரசியலுக்கு கூப்பிடுகிறார்கள்... ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, என்று நடிகை நமீதா கூறியுள்ளார். ஈரோட்டில் நடந்த தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை நமீதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நமீதாவிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்தனர். நமீதாவும் அனைவருக்கும் பொறுமையாக கையெழுத்து போட்டு கொடுத்தார்.
அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு சிட்டி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஈரோடு மக்கள், ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தாங்க. இதை நான் மறக்க மாட்டேன். நான் சுமார் 50 படங்களில் நடிச்சிட்டேன். இப்போ 2 தெலுங்கு படம், 1 தமிழ்படம், 1 கன்னட படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். எனக்கு வாழ்வு கொடுத்த தமிழையும், தமிழக மக்களையும் மறக்க மாட்டேன். எல்லாரும் நீங்க அரசியலுக்கு வருவீங்களான்னு கேட்கிறாங்க. என்னை அரசியலுக்கு வரும்படி கூப்பிடுறாங்க. ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது, என்றார்.